
சவுந்தர்யா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தார் இயக்குநர் பாக்யராஜ். படத்தின் பாடல் இசை வெளியிட்டு விழா முடிந்ததும் திரையில் விவேக் பேசிய ஐந்து நிமிட படம் ஓடியது. அது விவேக் கதையின் நாயகனாக நடிக்கும் பாலகாட்டு மாதவன் படத்தின் செய்தி. இதைப் பார்த்து இன்ப அதிர்ச்சிக்குள்னார் பாக்யராஜ். அந்த ஏழு நாட்கள் படத்தில் அவர் நடித்த கதாபாத்திரத்தின் பெயர் ‘பாலக்காட்டு மாதவன்’. ஆரம்பம் முதலே அடுத்தப் படம் அறிவிக்கப் போவதாக சொல்கிறீர்களே, அந்தப் படத்தின் பெயர் என்ன என்று பாக்யராஜ் கேட்ட போதெல்லாம், ”நீங்கள் அங்கே வந்து பாருங்க சார்” என்று பதுங்கி, ஒதுங்கிய படக்குழுவினர், இப்படி அவரது கதாபாத்திரத்தின் பெயரையே படப் பெயராக காட்டிய போது, உண்மையிலேயே அவர் இன்ப அதிச்சிக்கு ஆளானார்.









